சென்னைக்காரர்கள் மட்டுமே... புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்
Published on

சென்னையில் நாளை நடைபெறவுள்ள த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் இந்த மாவட்டத்திற்கு உட்பட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அக்கட்சியின் தலைமை நிலையச் செயலக அறிவிப்பு விவரம் :

”சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. சந்திரா கன்வென்ஷன் சென்டரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (28.01.2026, புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே அழைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட செயல்வீரர்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும்.” என்று ஆனந்த் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com