ஜன. 28வரை வாக்காளர் சேர்க்க அவகாசம்-பெ.சண்முகம்!

ஜன. 28வரை வாக்காளர் சேர்க்க அவகாசம்-பெ.சண்முகம்!
Published on

பொங்கல் பண்டிகையையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் - நீக்குதல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜனவரி 28ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்திட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். 

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதால் இப்பணியை ஜனவரி 28, 2026ந் தேதி வரை நீட்டிப்பு செய்திடவும், 2026 ஜனவரி 24, 25, தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்திடவும், எஸ்.ஐ.ஆர். பணியில் பெயர் நீக்கப் பட்டியலில் உள்ள குளறுபடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை இன்று (12.01.2026) நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

இக்கோரிக்கையினை  இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைப்பதாக அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com