டேவிட்சனிடம் சி.பி.ஐ. கரூரில் விசாரணை!

டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்
டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்
Published on

கரூர் துயரம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு முன்னாள் ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதத்திடம் சி.பி.ஐ. இன்று விசாரணை நடத்தியது.  

கரூர் விஜய் சாலை உலாவின்போது சிறுவர்கள், பெண்கள் என 41 பேர் கொல்லப்பட்டனர்.அது குறித்து முதலில் மாநில அரசு விசாரணை நடத்தியது. சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்தும், அந்த விசாரணையை ஏற்கமறுத்து சிபிஐ விசாரணை கேட்டு உச்சநீதிமன்றம்வரை பிரச்னையைக் கொண்டுபோனார்கள். 

அதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கரூருக்கு வந்து அலுவலகம் அமைத்து சிபிஐ குழு விசாரித்து வருகிறது. 

நேற்று விஜய்யின் பிரச்சார வாகனத்தை வரவழைத்து அதில்ஆய்வு நடத்தினார்கள். 

அதையடுத்து, கரூர்துயரசம்பவத்தின்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த இப்போதைய டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் பிரச்னை குறித்து இரண்டு முறை பகிரங்க பேட்டி அளித்திருந்தார். விவகாரத்தைக் கையாண்ட அவரிடம் இன்று கரூரில் சிபிஐ குழுவினர் விசாரணை நடத்தினர். 

இதேசமயம், தில்லியில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் சிபிஐ தனியாக விசாரணை நடத்திவருகிறது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com