த.வெ.க.வில் ஊடகங்களில் பேச புதிய கட்டுப்பாடு!

த.வெ.க. விசில் சின்னம்
த.வெ.க. விசில் சின்னம்
Published on

த.வெ.க. சார்பில் தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தலைமை நிலையச் செயலக அறிவிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“​பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது.” என்று த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com