தமிழ் நாடு
தினகரன் நாளேட்டில் தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டுள்ளனர் எனக் கூறி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதற்காக, அந்த ஏட்டின் ஆசிரியர் ரமேஷ், ம.தி.மு.க.வின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோருக்கு வழக்குரைஞர் மூலம் எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பியுள்ளார்.
ரூ.10 கோடி மான நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.