தமிழ் நாடு
பெண்களுக்கும் தனி தொகுதி வேண்டும் - சீமான்
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் பட்டியல் சமூகத்தினருக்கு தனிதொகுதி ஒதுக்கப்படுவதைப் போல, பெண்கள் போட்டியிடுவதற்கென தனிதொகுதி வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
சென்னை, பள்ளிக்கரணையில் நேற்று தென்சென்ன மக்களவைத்தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்காகப் பிரச்சாரம் செய்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், மேலவைகள் மூலமாக யாரையும் அமைச்சராக ஆக்கக்கூடாது என்றும்,
குடியரசுத்தலைவர் தேர்தலும் மக்கள் வாக்களிக்கும்படியானதாக மாற்றப்பட வேண்டும் என்றும் சீமான் கூறினார்.