மன்மோகனுக்கு மத்திய அரசு அவமதிப்பு- மு.க.ஸ்டாலின் சாடல்

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்
Published on

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் குடும்பத்தார் அவருக்கு நினைவகம் கட்டுவதற்குரிய இடத்தில் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியதை பா.ஜ.க. அரசு நிராகரித்துள்ளது; இது அவரது உயர்ந்த தொண்டையும், அவரது சீக்கிய சமூகத்தையும் நேரடியாகவே அவமதிக்கும் செயலாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  

இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர், “மன்மோகனின் குடும்பத்தார் வைத்த கோரிக்கையை மறுத்து, இரு முறை பிரதமராக இருந்த தலைவரின் இறுதிச் சடங்கு நிகழ்வைச் சாதாரணமாக நிகம்போத் காட்-இல் வைத்து நடத்தியிருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆணவத்தையும், பாரபட்சத்தையும் காட்டுகிறது. இது, அவரது பெரும் பங்களிப்புகளை மக்களின் நினைவில் இருந்து அகற்ற முனையும் அப்பட்டமான முயற்சி.” என்று கூறியுள்ளார்.  

”டாக்டர் மன்மோகன் சிங் அவர்களது தலைமை இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியமைத்துக் கோடிக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்தது. இத்தகைய உயர்ந்த தலைவரை அவமதிப்பது என்பது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதற்குச் சமமாகும். பெருந்தலைவர்களை அவமதிக்கும் கறை வரலாற்றில் இருந்து என்றும் மறையாது!” என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com