மருத்துவக் கல்வி மேலாண்மைக்கு புதிய அமைப்பு!

மருத்துவக் கல்வி இயக்குநரகம்
மருத்துவக் கல்வி இயக்குநரகம்
Published on

மாநில மருத்துவக் கல்வி - கற்றல் மேலாண்மை அமைப்பு என புதிய அமைப்பு ஒன்றை தமிழக அரசு உருவாக்குகிறது.  மருத்துவக் கல்வி - ஆராய்ச்சி இயக்குநரகம் மூலமாக இந்த அமைப்பு செயல்படும் என்று மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

: மருத்துவக் கல்வி - ஆராய்ச்சிக்கான அதிநவீன, தரவு உந்தும் மேலாண்மை அமைப்பு, ஆசிரியர் - மாணவர் துறைகள், கற்பித்தல் - கற்றல் செயல்முறைகள் ஆகியவை ரூ.87,08,400/- (ரூபாய் எண்பத்தேழு லட்சத்து எட்டாயிரத்து நானூறு மட்டும்) செலவில் அமைக்கப்படும்.

மாநில மருத்துவக் கல்வி மேலாண்மை அமைப்பு (SMELMS) :

* உயர்தரமான மற்றும் பயனுள்ள கண்காணிப்பு மூலம் மேம்படுத்தப்பட்ட கல்வி சேவை வழங்கல்.

*  மதிப்பீடுகளுக்கான தெளிவான காலக்கெடுவுடன் தரப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்துதல்.

* அனைவருக்கும் உயர்தர கல்வி வழங்க சமமான வாய்ப்பு அளித்தல்.

* முக்கிய செயல்திறன் குறியீடுகளைப் பயன்படுத்தி உள் தர உத்தரவாதம் மற்றும் செயல்திறன் மதிப்பீடு.

இந்த முன்முயற்சிகள் மூலம், தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் மருத்துவக் கல்வி முறையானது, எதிர்கால சுகாதாரத் தேவைகளை திறம்பட எதிர்கொள்ளத் தயாராக உள்ள உலகத் தரம் வாய்ந்த சுகாதார நிபுணர்களை உருவாக்குவதை உறுதி செய்கிறது.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

”திறமையான சுகாதார நிபுணர்களுக்கான தேவை அதிகரிப்பதை உணர்ந்து, தரமான மருத்துவக் கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், எம்.பி.பி.எஸ் இடங்களைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. வலுவான பாடத்திட்ட சீர்திருத்தங்கள், ஆசிரிய மேம்பாடு, அதிநவீன ஆராய்ச்சி மற்றும் உறுதியான தலைமைத்துவம் ஆகியவற்றின் மூலம் வளரும் சுகாதார சவால்களை எதிர்கொள்ள வருங்காலங்களில் சுகாதார சேவை வழங்குநர்களை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது.” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

logo
Andhimazhai
www.andhimazhai.com