கலைஞர் கனவு இல்லம் பற்றிய விளக்கம்
கலைஞர் கனவு இல்லம் பற்றிய விளக்கம்

மாநில அரசு நிதியில்தான் கலைஞர் வீட்டுத் திட்டம் - அண்ணாமலைக்கு மறுப்பு!

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் புதிதாக அறிவிக்கப்பட்ட கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு, ஒட்டுமொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது என்று அரசுத்தரப்பில் மறுப்பும் விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளது. 

நிதிநிலை அறிக்கை தொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று கூறிய கருத்தில், மைய அரசின் நிதியில் பெயரை மாற்றி திட்டத்தை அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து, தமிழ்நாட்டு அரசால் அமைக்கப்பட்டுள்ள உண்மைத்தன்மை சரிபார்ப்புக் குழு இன்று வெளியிட்டுள்ள விளக்கம்:

“ வதந்தி:

மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறு பெயர் கொடுத்து மாநில அரசு புதிய திட்டங்களாக அறிமுகம் செய்யதுள்ளது.

வீடற்றோருக்கு வீடு வழங்கும் 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தை 'கலைஞர் கனவு இல்லம்' எனும் திட்டமாக மாற்றியுள்ளது.

உண்மை என்ன?

1.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் என்பது ரூ.1.2 லட்சம் வழங்கும் திட்டமாகும். இதில் ரூ.72,000 ஒன்றிய அரசும், ரூ.48,000 தமிழ்நாடு அரசும் வழங்குகின்றன.

கலைஞர் கனவு இல்லம்

இத்திட்டத்தின் முதல் கட்டமாக 1 லட்சம் வீடுகள் தலா ரூ.3.50 லட்சம் செலவில் இவ்வாண்டில் கட்டப்படும். தமிழ்நாடு அரசே ஒட்டுமொத்த நிதியையும் வழங்கும்.

2.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்

ஒன்றிய அரசு வழங்கும் தொகை போதாது என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு, கான்கிரீட் கூரை அமைப்பதற்காக கூடுதலாக ரூ.1,20,000 வழங்குகிறது. ஆக, இத்திட்டத்தில் மொத்தம் ரூ.2,40,000 ஒரு பயனாளிக்கு வழங்கப்படுகிறது.

கலைஞர் கனவு இல்லம்

கிராமப்பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் இதுவாகும். 2030 ஆம் ஆண்டுக்குள் 'குடிசைகள் இல்லா தமிழ்நாடு' என்ற இலக்குடன் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட இருக்கின்றன.

3.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்

மேற்கண்ட ரூ.2.4 லட்சத்தில் தமிழ்நாடு அரசு 70% தொகையை வழங்குகிறது. ஒன்றிய அரசு 30% மட்டுமே தருகின்றது.

கலைஞர் கனவு இல்லம்

பயனாளிகளுக்கு வீடு கட்ட நிலம் இல்லாவிடில், நிலத்தையும் அரசே வழங்குகிறது.” 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com