தமிழ் நாடு
திடீர் உடல்நல பாதிப்பால் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று முற்பகலில் சேர்க்கப்பட்டார், முதலமைச்சர் ஸ்டாலின். அவருக்கு சில சோதனைகள் செய்யப்பட வேண்டும் என முன்னதாக அந்த மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கபப்ட்டது.
இந்நிலையில், இன்று இரவு வெளியிடப்பட்ட இரண்டாவது அறிக்கையில், அவருக்கு மேலும் மூன்று நாள்கள் ஓய்வுதேவை என்றும் சில சோதனைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அப்பல்லோ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே சமயம், மருத்துவமனையில் இருந்துகொண்டே அவர் தன்னுடைய அலுவலகப் பணிகளை கவனிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.