ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்கள்! – அமைச்சர் தங்கம் தென்னரசு

மூன்றாம் பாலினத்தவர்கள்
மூன்றாம் பாலினத்தவர்கள்
Published on

ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள்:

சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும். நவீன வசதிகள் கொண்டதாக இந்நகரம் அமையும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்.

வேளச்சேரி பிரதான சாலை முதல் கிண்டி வரை ரூ.310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

மகளிர் நலனுக்கு 13,807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு.

பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும்

மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்கப்படும்.

ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தை சென்னை, தாம்பரம், ஆவடி மாநகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

3.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ. 600 கோடி ஒதுக்கீடு.

மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும்

logo
Andhimazhai
www.andhimazhai.com