‘இந்தியா தாக்குதலை நிறுத்த முன்வந்தால் நாங்களும் தயார்’ என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் 9 பயங்கரவாத தளங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இது தொடர்பான வீடியோவையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா தாக்குதலை நிறுத்த முன்வந்தால் நாங்களும் தயார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், "பாகிஸ்தான் எந்த விரோதப் போக்கையும் தொடங்காது. ஆனால் தாக்குதலை தொடர்ந்தால் பதிலடி கொடுப்போம். கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவுக்கு எதிராக எந்த விரோத நடவடிக்கையையும் தொடங்க மாட்டோம் என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். இருப்பினும், நாங்கள் தாக்கப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம்.
இந்தியா இதில் பின்வாங்க முடிவு செய்தால், இந்த பதற்றத்தை குறைக்க நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம்.” என்றார்.