‘கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’ – பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்த கனிமொழி!

அமைச்சர் பொன்முடி - கனிமொழி எம்.பி.
அமைச்சர் பொன்முடி - கனிமொழி எம்.பி.
Published on

தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை உடலுறவுடன் ஒப்பிட்டு அமைச்சர் பொன்முடி பேசியிருந்தார். அவரின் இந்தபேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ள நிலையில், ‘மூத்த அமைச்சர் இப்படியா பேசுவது’ என பலரும் கொந்தளித்துள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது." என்று தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com