மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில், இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு இன்று நடைபெற்றது. இதில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டப் பலர் பங்கேற்றனர்.
மேலும் மாநாட்டின் முக்கிய அம்சமாக 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை,
• திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்
• பெகல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்
• குன்றம் குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்
• தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்
• தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்
• சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.