தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம், எதிர்ப்போம், ஏற்க மாட்டோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:“9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் மத்திய அரசுக்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
அவர் கொடுத்த “மதயானை” எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, கழகத் தலைவர்-முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்!” என அன்பில் மகேஸ் கூறியுள்ளார்
புதிய கல்விக் கொள்கை மாநிலங்களுக்குப் பொருந்துமா? என்ற தலைப்பில் 2016 இல் கருணாநிதி எழுதியிருந்த கட்டுரையை பதிவிட்டுள்ளார்.