துரோகம் செய்தது யார்? – செங்கோட்டையன் விளக்கம்!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
Published on

தோல்விக்கு துரோகிகள் காரணம் என கூறியது அந்தியூருக்கு மட்டும் பொருந்தும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதிமுகவின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையன் பேச்சும், செயல்பாடுகளும் தான் கடந்த சில நாட்களாக அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன

ஈரோடு மாவட்டம் கோபியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், திமுக ஆட்சியில் பல்வேறு சோதனைகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். எனவே தொண்டர்களோடு தொண்டராக இருந்து நான் பணியாற்றி மீண்டும் தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம். சில துரோகிகளால் நாம் தேர்தலில் தோற்றோம். அவர்களை அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் என பேசியிருந்தார். இது கட்சியினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று காலை கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறியதாவது:

அந்தியூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு துரோகம்தான் காரணம் என கூறினேன். துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். ஆர்.பி. உதயகுமார் என்னை பற்றி பேசவில்லை. நான் செங்கோட்டையனை விமர்சிக்கவில்லை என ஆர்.பி. உதயகுமாரே கூறிவிட்டாரே. கூட்டத்தில் பேசும் போது கட்சியின் பொதுச்செயலாளர் என தெளிவாக குறிப்பிட்டேன் என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com