ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்: மழைக்கு 300-க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் கனமழை காரணமாக 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானின் பாக்லான் பகுதியில் கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழை காரணமாக அந்த மாகாணத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐக் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. வெள்ளப் பெருக்கில் உயிர்பிழைத்தவர்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகித்ததாக ஐ.நா.வின் உலக உணவு அமைப்பு தெரிவித்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com