உலகம்
ஜெருசலேத்தில் உள்ள அல் அக்சா மசூதி, இசுலாமியர்களின் மூன்றாவது முக்கிய புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. இங்கு ரலமான் தொழுகையில் ஈடுபடுவதற்காகச் சென்ற பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் அரசு அனுமதி மறுத்தது. மீறி அங்கு கூடியவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தியது. இதனால் தொழுகைக்காகத் திரண்ட பாலஸ்தீனர்கள் சிதறி ஓடினர்.
இஸ்ரேல் அரசின் இத்தாக்குதல் நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
முன்னதாக, ஈரான் நாட்டின் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து அல் அக்சா மசூதி மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.