ஈரோடு இடைத்தேர்தல்: 9 மணி நிலவரப்படி 10.95% வாக்குப்பதிவு!

தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்
தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்
Published on

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 10.95% ஓட்டுப் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 46 பேர் களத்தில் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சி அதிமுக, தேமுதிக, பாஜக தேர்தலை புறக்கணித்துள்ளன.

ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர்.

2,27,237 பேர் வாக்களிப்பதற்காக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. சூரம்பட்டி வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வாக்களித்தார். காலை 9 மணி நிலவரப்படி 10.95% ஓட்டுப் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் வாக்களித்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8ஆம் தேதி அறிவிக்கப்படும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com