‘தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டெடுப்பு!’ - அமைச்சர் தங்கம் தென்னரசு

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க மணி
வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க மணி
Published on

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் தங்கத்தால் செய்யப்பட்ட அணி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3ஆம் கட்ட அகழாய்வில் பல அரியவகை தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் "தங்கத்தால் செய்யப்பட்ட மணி" ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மணி, 6 மி.மீ சுற்றளவும், 4.7 மி.மீ கணமும், 22 மி.கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com