மீண்டும் சொத்து வரி உயர்வா?- நகராட்சித் துறை விளக்கம்!

மீண்டும் சொத்து வரி உயர்வா?- நகராட்சித் துறை விளக்கம்!
Published on

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவீதம் அளவுக்கு சொத்து வரியை  உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தச் செய்தி
முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. 

தமிழ்நாட்டு அரசின் நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை, முதன்மைச் செயலாளர் இதுகுறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

”ஒன்றிய அரசின் 15-வது நிதிக்குழுவின் நிபந்தனைகளின்படி, ஒவ்வொரு நகர்ப்புற அமைப்பும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சியின் சதவிகிதத்தை ஒப்பிடுகையில் சராசரியாக 11.5 சதவிகிதம்  சொத்துவரி வருவாயை உயர்த்தினால் மட்டுமே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனையைக் கருத்தில் கொண்டு 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சொத்துவரி அரசாணை எண்.113, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (எம்ஏ4) துறை, நாள் 5.9.2024-ன்படி
6 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினால் சொத்துவரி எதுவும் உயர்த்தப்படவில்லை.” என்றும், 

”இந்நிலையில், 3.5.2025 நாளிட்ட ஒரு நாளிதழில் “எவ்வித அறிவிப்புமின்றி உள்ளாட்சி அமைப்புகள்,   6 சதவிகிதம் சொத்து வரியை  மீண்டும் உயர்த்தி அமலுக்கு வந்துள்ளதாக” வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும்.” என்றும் நகராட்சி நிர்வாகத் துறையின் செயலாளர் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com