செய்திகள்
மாநிலத்தில் சுயாட்சி, இந்தி திணிப்பை தடுப்பதே எனது பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
“நேற்றைய தினம் நடைபெற்ற எனது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னிலையில் நான் தெளிவாக கூறி இருக்கிறேன். மாநிலத்தில் சுயாட்சி வேண்டும், குறிப்பாக இன்று திணிக்கப்படக்கூடிய இந்தி திணிப்பை கைவிட வேண்டும்.
இருமொழிக் கொள்கையை தான் கொண்டு வரவேண்டும். அது தான் எனது பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி.
எனது கவலைகள் எல்லாம் நாட்டை பற்றி தான், மாநிலத்தை பற்றி தான். மாநில உரிமைகளை பெற வேண்டும் என்பது பற்றி தான்.” என்றார்.