நிலவு தேயாத தேசம் – 20

நிலவு தேயாத தேசம் – 20
Published on

நிகழ்கால வரலாற்றிலிருந்து கொஞ்சம் பின்னே போகலாம்.  பின்னே என்றால் நியோலித்திக் காலம்.  நியோலித்திக் காலம்தான் கற்காலத்தின் கடைசிப் பகுதி.  இது கி.மு. 10000-இலிருந்து தொடங்கி கி.மு.4000-இல் முடிகிறது.  இந்த நியோலித்திக் காலம் முடியும் தறுவாயில் – அதாவது, 6000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய துருக்கியில் எஃபேசஸ் என்று அழைக்கப்படும் நிலப்பகுதிக்கு வந்து சேர்ந்த ஒரு மனிதக் கூட்டம் அங்குள்ள மலைப்பகுதிகளிலும் குன்றுகளிலும் கற்களை அடுக்கி வீடு கட்டி வாழ ஆரம்பித்தது.    பின்னர் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் வாழ்ந்த மக்களை விரட்டி விட்டு எஃபேசஸ் என்ற மாபெரும் நகரத்தை நிர்மாணித்தான் ஏதென்ஸ் நகரத்து இளவரசனான ஆந்த்ரக்ளாஸ். 

மேலே காண்பது எஃபேசஸ் நகரத்தின் வரைபடம்.  இந்நகரின் முக்கியமான பகுதிகளில் ஒன்று இதன் நூலகம். கீழே உள்ள புகைப்படத்தில் தெரிவது அந்த நூலகம்.   

நூலகத்தின் இன்னொரு தோற்றம் கீழே:

மேலே: 60,000 பேர் வாழ்ந்த பிரம்மாண்டமான நகரமான எஃபெசஸில் ஒரு வீதி.   ரோமானியப் பேரரசின் ஆசியா மைனர் பகுதியில் எஃபேசஸ் தான் மூன்றாவது பெருநகராக இருந்திருக்கிறது.

மேலே மனிதர்கள் இல்லாமல் தெரியும் வீதி நான் சென்றிருந்த போது ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருந்தது.

மேலே உள்ள புகைப்படம்:  தூரத்திலிருந்து நூலகம்.  கீழே : நகரத்தின் இன்னொரு பகுதி.  தூரத்தில் நூலகம் தெரிகிறது.

 மேலே: ஒரு சீரான வீதி. பூமியிலிருந்து இன்னும் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நூலகத்திற்கு அடுத்தபடியாக எஃபேசஸ் நகரின் சிறப்பு, அங்குள்ள நாடக அரங்கம் (amphitheatre). 

இந்தப் புகைப்படங்களில் ஒரு பெண் கருப்புக் குடை பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.  காரணம், எஃபெசஸில் மே மாதம் வெயில் கொளுத்தியது.  கடும் பாலையில் நிற்பது போல் உடலெல்லாம் காந்தியது.  (ஆனால் இரவில் குளிராக இருந்தது.)  வெள்ளைக்காரர்களின் தோலெல்லாம் தீய்ந்து போனதைக் காண முடிந்தது.  சிலருடைய தோல் பட்டை பட்டையாகக் கருப்பாகவும் ரத்த நிறமாகவும் மாறிக் கொண்டிருந்தது.   

மார்ச்   10 , 2016  

logo
Andhimazhai
www.andhimazhai.com