இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

cricket team of India
இந்திய அணி வீரர்கள்
Published on

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா  259 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 80 ரன்கள் குவித்தார். பின்னர் அக்சர் படேல் 57 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 52 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா 4.4 ஓவர் மீதம் இருக்கும்போதே 259 ரன்கள் குவித்து போட்டியை வென்றது. அக்சர் படேல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com