இங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணிக்கு சுப்மான் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணைக்கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஜூன்மாதம் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) சுழற்சியில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் ஆட்டத்தில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில் புதிய அணியில் இடம்பெறுவோர் குறித்த எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்துள்ளது.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் சுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பண்ட்(துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்,ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங்,குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சர்பராஸ்கான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது சமி ஆகிய மூன்று வீரர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பின் கருண் நாயர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிவரும் தமிழக வீரர் சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தருக்கும் வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.