ஆஸி.க்கு எதிரான டி20 போட்டி மழையால் ரத்து: தொடரை கைப்பற்றிய இந்திய அணி!

ஆஸி.க்கு எதிரான டி20 போட்டி மழையால் ரத்து: தொடரை கைப்பற்றிய இந்திய அணி!
Published on

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி மழையின் காரணமாக கடைசி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், இந்திய அணி தொடரை 2-1 என வித்தியாயத்தி கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் (முதல் போட்டி மழையால் ரத்து) தொடரில் முன்னிலை வகித்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா - சுப்மன் கில் களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. இந்திய அணி 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் அடித்திருந்தபோது மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அபிஷேக் சர்மா 23 ரன்களுடனும், கில் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மழை நின்று, போட்டி மீண்டும் தொடங்கும் என ரசிகர்கள் மைதானத்தில் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. இதன் காரணமாக போட்டி ரத்துசெய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

முதல் போட்டியில் மழையால் பாதியில் ரத்துசெய்யப்பட்ட நிலையில், 2, 3 மற்றும் 4-வது போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. கடைசி போட்டியில் ரத்துசெய்யப்பட்டதால், இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இந்திய அணி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். இவர், டி20யில் குறைவான பந்துகளில் 1,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com