சச்சின்
சச்சின்

உலகக் கோப்பை: இந்தியா வெற்றி பெறும் சச்சின் நம்பிக்கை!

"உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும். இந்த நாளுக்காகத் தான் அனைவரும் காத்திருந்தோம்" என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பகல் 2 மணி அளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியையொட்டி விமான சாகசம் உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியைக் காண்பதற்காக மைதானத்துக்குச் செல்கிறார்.

இந்த நிலையில், “உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண அகமதாபத் வந்த சச்சின் டெண்டுல்கர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்க வந்துள்ளேன். இன்று நாம் கோப்பையை வெல்வோம் என நம்புகிறேன். இந்த நாளுக்காகத்தான் அனைவரும் காத்திருந்தோம்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com