முதல்வரிடம் விருதுபெறும் 5 காவல் அதிகாரிகள் யார் யார்?
இந்த ஆண்டுக்கான சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்கவுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2023ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச்சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும்.
1.க. வெங்கட்ராமன் ,கூடுதல் காவல் துறை இயக்குநர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை
2. அஸ்ரா கர்க், காவல்துறைத் தலைவர்/ கூடுதல் காவல் ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு (சென்னை வடக்கு)
3.சு.ராஜேந்திரன், காவல்துறை துணைத் தலைவர், சென்னை
4. ப.ஹீ. ஷாஜிதா, காவல் கூடுதல் துணை ஆணையாளர் சென்னை
5. ஹா. கிருஷ்ணமூர்த்தி, காவல் துணைக் கண்காணிப்பாளர், சென்னை
இதே போன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும் கீழ்க்கண்ட 10 காவல் துறை அதிகாரிகள் 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:-
1. வே. அனில் குமார், காவல் உதவி ஆணையர், கொங்கு நகர் சரகம், திருப்பூர் மாநகரம்
2. கோ. சரவணன், காவல் துணைக் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, மதுரை சரகம்.3. ர, மாதையன், காவல் ஆய்வாளர், சூலூர் காவல் நிலையம் கோயம்புத்தூர் மாவட்டம்.
4. மா. அமுதா, காவல் ஆய்வாளர். பீலமேடு காவல் நிலையம். கோயம்புத்தூர் மாநகரம்.
5. ம. அனிதா, காவல் ஆய்வாளர், மாசார்பட்டி காவல் நிலையம், தூத்துக்குடி மாவட்டம்.
6. இரா. விஜயா, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்
7. ஆ. மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், அரியலூர் மாவட்டம்.
8. அ.சித்திராதேவி, காவல் ஆய்வாளர், இணைய குற்றப்பிரிவு. திருப்பூர் மாவட்டம்.
09. ந. மணிமேகலை, காவல் ஆய்வாளர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சென்னை பெருநகர காவல்.
10. மறைந்த காவல் ஆய்வாளர் கு. சிவா, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, திருச்சிராப்பள்ளி,
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், தமிழ்நாடு முதலமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.