பிப்ரவரி 13இல் ஸ்டாலின்- கார்கே சந்திப்பு!

பிப்ரவரி 13இல் ஸ்டாலின்- கார்கே சந்திப்பு!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடர்பாக வரும் 13ஆம் தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே சந்திக்க உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில நாள்களில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இடையே கடந்த சில நாள்களுக்கு முன் முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருகிற 13ஆம் தேதி சென்னைக்கு வந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேச உள்ளார். அப்போது, காங்கிரசுக்கான தொகுதிப் பங்கீடு உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மேலும் இரண்டு தலைவர்கள் சந்திப்பில் தொகுதிப் பங்கீடு இறுதியாக வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதற்கு முன்னர், வரும் 9ஆம் தேதி தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவுடன் காங்கிரஸ் கட்சி 2ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com