தமிழ் நாடு

வேறு கட்சிகளிலிருந்து எம்.எல்.ஏ. பதவியைத் துறந்துவிட்டு வருபவர்களை த.வெ.க.வில் சேர்ப்பது, அவர்களாக வந்தாலும், ஊக்குவிப்பதைப் போல இருக்கிறது என எங்கள் அதிருப்தியைத் தெரிவித்துவிட்டோம்; இப்போதும் அதுதான் எங்கள் நிலைப்பாடு என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.