முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பா.ஜ.க. ஆட்சி கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது - முதல்வர் ஸ்டாலின்!

மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது என்பதையே லோக்நிதி ஆய்வு முடிவு காட்டுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சற்றுமுன் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு: 

"புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

அதில்,

27% பேர் #Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும்,

23% பேர் விலைவாசி உயர்வு என்றும்,

55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும்,

ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.

இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது.

அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.

'சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!" என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com