கோப்புப்படம்
கோப்புப்படம்

பூங்காவுக்குள் நாய்கள் – சென்னையில் கட்டுப்பாடு!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நாய்கள் கடித்ததில் சிறுமி காயமடைந்த சம்பவத்தை தொடர்ந்து, பூங்காக்களில் நாய்களை அழைத்து வர சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு விதித்துள்ளது.

சென்னை மாநகராட்சி விதித்துள்ள கட்டுப்பாடுகள்:

1. பூங்காவுக்குள் ஒரு உரிமையாளர் ஒரு நாயை மட்டுமே அழைத்து வர வேண்டும்,

2. நாயை உரிய கயிற்றைக் கொண்டு கட்டுவதுடன், அதன் வாய்ப்ப குதியை மூடியிருக்க வேண்டும்,

3. நாய்களுக்கு தடுப்பூசி போடுவதுடன், உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்படும்.

4. தெருநாய்கள் மற்றும் கயிறு கட்டப்படாத நாய்கள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படாது,

5. பூங்காவில் விளையாடும் பகுதியில் நாய்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com