செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

தொகுதிப் பங்கீடு… ஓரிரு நாள்களில் இறுதி முடிவு – செல்வப்பெருந்தகை சொல்கிறார்

தி.மு.க.வுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஓரிரு நாள்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, வெள்ள நிவாரண நிதியாக ரூ.37,000 கோடியை மாநில அரசு கேட்டதாகவும், ஆனால் மத்திய அரசு ஒரு ரூபாயைக் கூட இதுவரை ஒதுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாமல் எப்படி வந்து வாக்கு கேட்கிறார் பிரதமர் மோடி எனக் கேள்வி எழுப்பிய அவர், ராமேஸ்வரம் கோயிலை உலகத்தரம் வாய்ந்த ஆலயமாக மாற்றுவேன் என 2014இல் பிரதமர் வாக்குறுதி அளித்தார்; ஆனால் இதுவரை ராமேஸ்வரம் கோயிலைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.

தேர்தல் பத்திரம் பற்றிய தகவலை வெளியிட அவகாசம் கோரிய எஸ்.பி.ஐ.யைக் கண்டித்து இன்று மாலை சென்னையில் எஸ்.பி.ஐ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவித்த செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டு மக்களை ஒருபோதும் பிரதமர் மோடி ஏமாற்ற முடியாது என கூறினார்.

விவசாயிகளின் நண்பன் எனச் சொல்லும் பிரதமர் மோடி, புதிய வேளாண் சட்டத்தை ஏன் கொண்டுவந்தார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது என்றும் ம.தி.மு.க., வி.சி.க. உட்பட்ட மாநிலக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை முடித்தபின் தேசிய கட்சியான காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.

மேலும், தொகுதிப் பங்கீடு குறித்து ஓரிரு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறிய செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்.பி. ஒருவர் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது வதந்திதான் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com