S.I.R.- ஐ தடுப்பதே ஆகப்பெரும் கடமை – முதல்வர் ஸ்டாலின்!

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் ஊடகத்தில் கூறியிருப்பதாவது: “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை!

ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் எஸ்.ஐ.ஆர். எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - களப் போராட்டம்!

மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட எஸ்.ஐ.ஆர். பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட வார் ரூம், உதவி எண்!

களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் - கண்டன முழக்கங்களை எழுப்பியும் எஸ்.ஐ.ஆர். எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்!

தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com