முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சாதிவாரி கணக்கெடுப்பு: பா.ம.க. வெளிநடப்பு!

“சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, உங்களுக்கு சாதகமாகத்தான் நாங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று பா.ம.க. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பா.ம.க. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.

அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நிதிநிலை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது, சட்டப்பேரவையிலும் பல நேரங்களில் பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும் தாண்டி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, ஜி.கே. மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் என்னை பலமுறை நேரிடையாக வந்து சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசியிருக்கிறார்கள். அது குறித்து விளக்கமாக பதில் சொல்லியிருக்கிறோம். நீங்கள் சொல்கிற கொள்கைக்கு நாங்கள் எதிரி இல்லை. உங்களுக்கு சாதமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறோம். குரல் கொடுத்து வருகிறோம்.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச வாய்ப்பளிக்காததால் பா.ம.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com