அமித் ஷாவிடம் பேசியது என்ன...? - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
Published on

“அதிமுக ஒன்றிணைய வேண்டும், வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினேன்” என்று டெல்லி சென்று திரும்பிய செங்கோட்டையன் கூறியுள்ளார்.

திமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்தார். இதையடுத்து அதிமுக கட்சி பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று அவர் டெல்லி சென்றார். கோவிலுக்குச் செல்வதாகவும், மன நிம்மதிக்காக ஹரித்வார செல்வதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில், டெல்லியிலிருந்து செங்கோட்டையன் இன்று தமிழகம் திரும்பினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் கூறியதாவது: “ஹரித்வார செல்வதாகக் கூறினேன். டெல்லி சென்றதும் அமித்ஷாவைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. அவரை சந்தித்துப் பேசினேன். அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று பேசினேன். இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றிய கருத்துகள் அங்குப் பரிமாறப்பட்டன. அதிமுக இயக்கம் வலுப்பெற வேண்டுமெனக் கருத்துகளை முன்வைத்தேன். மக்கள் பணி, இயக்கம் வலிமை பெறவும் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவேன்.

உள்துறை அமைச்சரைச் சந்தித்தபோது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் இருந்தார். அவரிடம், ஈரோட்டிலிருந்து புறப்படுகின்ற ஏற்காடு விரைவுவண்டி ரயிலின் நேரத்தை மாற்றும்படி கோரிக்கை வைத்தேன். அவரும் பரிசீலிப்பதாகக் கூறினார்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com